Athikaram 36 - Meyyunardhal Kural, Pt. 351பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
பொய்யானவற்றை மெய்யான தென்று, உணரும்
மயக்கஉணர்வால் பிறப்பின் சிறப்பு கெடும்.
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
பொய்யானவற்றை மெய்யான தென்று, உணரும்
மயக்கஉணர்வால் பிறப்பின் சிறப்பு கெடும்.
Athikaram-30 - Vaaimai Kural 295மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
தன் மனமறிய உண்மை பேசுகின்றவன்,
தவமுடன் தானம் செய்வோரைவிட உயர்ந்தவன்.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
தன் மனமறிய உண்மை பேசுகின்றவன்,
தவமுடன் தானம் செய்வோரைவிட உயர்ந்தவன்.
Athikaram-7 Makatperu Kural - 63தம்பொரு ளென்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
நம்செல்வம் என்பதே நாம்பெற்ற பிள்ளைகள்;
நம்செயலை வைத்தே அமையும் அச்செல்வங்கள்.
தம்பொரு ளென்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
நம்செல்வம் என்பதே நாம்பெற்ற பிள்ளைகள்;
நம்செயலை வைத்தே அமையும் அச்செல்வங்கள்.
Athikaram-7 Makatperu Kural - 66குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
குழந்தைகளின் மழலைப் பேச்சில் மகிழாதவரே,
குழலிசையும் யாழிசையும் இனிது என்பர்.
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
குழந்தைகளின் மழலைப் பேச்சில் மகிழாதவரே,
குழலிசையும் யாழிசையும் இனிது என்பர்.
Athikaram-7 Makatperu Kural - 69ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன்மகனைச் சான்றோனெனக் கேட்ட தாயானவள்,
ஈன்றபோதடைந்த இன்பத்தைவிட இன்பம் அடைவாள்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன்மகனைச் சான்றோனெனக் கேட்ட தாயானவள்,
ஈன்றபோதடைந்த இன்பத்தைவிட இன்பம் அடைவாள்.
Athikaram-7 Makatperu Kural - 70மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
என்னதவம் செய்தானோ இவனைப்பெற, இவன்தந்தை
என்றபெயர் எடுப்பதே மகன்செய்யும் உதவி.
மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
என்னதவம் செய்தானோ இவனைப்பெற, இவன்தந்தை
என்றபெயர் எடுப்பதே மகன்செய்யும் உதவி.